குவைத் நாட்டில் தனது மனைவிக்கு தலைவாரியதாக தம்பதியினர் இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் உள்ள நாளிதழ் ஒன்று சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை ஆபாசமாக உள்ளதாக கூறி வெளியிட்டது.
அதில் தனது மனைவிக்கு கணவர் தலைவாரி விடுவது போல வீடியோ பதிவு செய்த தம்பதியினர், அப்போது அந்த பெண் வீடியோவில் ஆபாசமாக போஸ் கொடுத்து, ஏதோ வார்த்தைகளை கூறியதாகவும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. ஆனால் அவர்களை கைது செய்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
அவர்கள் இருவரும் Bidoon என்ற பிற்பட்ட இனத்தை சார்ந்தவர்கள். இந்த இனத்திற்கு குவைத் அரசு குடியுரிமை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மறுத்து வருகிறது. இதனால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட Bidoon மக்கள் சட்டவிரோதமாக வாழ்ந்துவருவதாகவும், இதனடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குவைத் அரசு தெரிவித்துள்ளது.