உலகம்

ஊரடங்கு காரணமாக 2,000 கிலோ மீட்டர் பயணம் செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊரடங்கு காரணமாக ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து இயங்காததால், பதவி ஏற்க இரு நீதிபதிகள்  கார் மூலமாக 2 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 18-ம் தேதி பம்பாய், மேகாலயா, ஒடிசா உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம்,  நியமித்தது. 

இதன்படி பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக, கோல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி திப்னாகர் தத்தா, மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக, பிஸ்வநாத் சோமாதர், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதியாக, முகமது ரபீக் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

ALSO READ  யோகா கலையின் பிறப்பிடம் குறித்து சர்ச்சை பேச்சு -கே.பி. சர்மா ஒலி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இன்று பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்நிலையில் பதவியேற்பதற்காக பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள திப்னாகர் தத்தா, மேகாலயா நீதிபதியாக பதவியேற்க உள்ள பிஸ்வநாத் சோமாதர் ஆகியோர் , கார் மூலமாக சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணாம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த லா பல்மா எரிமலைக் குழம்பு…!

நீதிபதி திப்னாகர் தத்தா தனது மகனுடன் கொல்கத்தாவில் இருந்து காரில் பயணம் செய்து மும்பை சென்றடைந்தார். அதேபோல நீதிபதி பிஸ்வநாத் சோமாதர் தனது மனைவியுடன் கொல்கத்தாவிலிருந்து ஷில்லாங் சென்றடைந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘உங்களைப் பாதுகாப்பதன் மூலம் உங்கள் வீட்டை பாதுகாக்கலாம்’- ஜாக்கி சான்….

naveen santhakumar

பிரபலமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் காலமானார்:

naveen santhakumar

உருவகேலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்

Admin