ஹாங்காங்:-
தற்பொழுது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஒரே பிரச்சினையாக கொரோனா விளங்கி வருகிறது. இதனை எதிர்கொள்வது எவ்வாறு என்று தெரியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது.
எனவே உலக நாடுகள் அனைத்தும் மக்களை சமூக விலகலை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி வருகிறது. மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதற்காக பல்வேறு நாடுகள் முழு அளவிலான ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஜாக்கிசான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்:-
அனைவருக்கும் இது மிக கஷ்டமான காலம் என்று நான் அறிவேன். நாம் அனைவரும் கொரோனா வைரஸ் என்ற ஒரே பிரச்சனையை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
நாம் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும். நமது அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவேண்டும். ஒருவேளை நீங்கள் வெளியில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருங்கள். நாம் ஒளிமையமான எதிர்காலத்தை எதிர்கொள்ளோம் என நம்புவோம், ஜெய் ஹோ என்று நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசியுள்ளார்.