சீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்ததால் அந்த நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சீனாவின் மேற்கு பகுதியில் ஜின் ஜியாங்கில் மாகாணம் அமைந்துள்ளது. இன்று காலை சூரியன் உதித்தபோது வானத்தைப் பார்த்த அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது காரணம் ஒரே நேரத்தில் வானத்தில் மூன்று சூரியன்கள் தெரிந்ததால் அப்பகுதி மக்கள் வியப்புடன் அதனை கண்டனர்.
சாதாரணமாக சூரிய ஒளி நீர் அப்பகுதியை ஊடுருவி செல்லும் போது அது பனித் துகள்களின் மீது பட்டு அது பிரதிபலிப்பதால் இத்தகைய தோற்றம் ஏற்படுவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாக இந்த நிகழ்வு பனிப்பிரதேசத்தில் தான் நிகழும். ஆனால் இந்த முறை பனிப்பொழிவு குறைந்த ஜின்ஜியாங் நகரில் நிகழ்ந்த வந்தது உண்மையிலேயே அதிசயம்தான் என அவர்கள் கூறினர்.கடந்த ஆண்டும் இதே போல் சீனாவின் ஹெய்லாங்சியாங் வானத்தில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டது. இத்தகைய நிகழ்வை சூரியனின் இரு காதுகள் என அழைக்கின்றனர்.