ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்பட முக்கியப் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றியதோடு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் உருஸ்கன் மாகாணத்தில் 1968 ஆம் ஆண்டு முல்லா அப்துல் கனி பரதர் பிறந்தார். அங்கிருந்த சோவியத் யூனியன் ஆட்சிக்கு எதிராக ஆப்கன் முஜாகிதீன் அமைப்புடன் இணைந்து சண்டையிட்டவர் தான் முல்லா அப்துல் கனி பரதர்.
அதுபோன்று கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ -யுடனான சந்திப்பை தலைமை ஏற்று நடத்தியவர் முல்லா அப்துல் கனி.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அரசுடன் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் முதன்மை பங்கு வகித்தவர் முல்லா அப்துல் கனி பரதர்.
இந்த நிலையில் தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.