உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இயலாமல் திணறி வருகிறது. மறுபுறம் சிலர் வேண்டுமென்றே கொரோனாவை பரப்பும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீபத்தில்கூட பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் பொது இடங்களில் தும்மி கொரோனா வைரஸை பரப்புவோம் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போன்ற மற்றொரு அருவருப்பான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வந்த பார்சலை பார்த்தபோது அது லேசாக ஈரத்துளிகள் இருந்துள்ளது. இதையடுத்து தனது வீட்டின் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது, அந்த பார்சலை கொண்டு வந்த நபர் வேண்டுமென்றே எச்சிலை துப்பி தான் பார்சல் மீது அதை தடவி உள்ளார்.
அவர் யார், அவருக்குக் கொரோனா இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து அமேசான் நிறுவனத்திடம் கேட்டபோது:-
இந்த விஷயம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நபர் எங்களது நிறுவனத்தைச் சேர்ந்தவர் அல்ல வேறு ஒரு டெலிவரி நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றனர்.