கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்து நாட்டில் கடும் கொந்தளிப்பும் குழப்பமும் நிலவுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ரஷ்யா ஆங்கில கால்வாய் மற்றும் வட ஆர்டிக் கடலில் தனது கப்பல் படை மூலம் ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது
ரஷ்யாவின் 7 கப்பல்கள் (இரண்டு பீரங்கி தாங்கிய கப்பல்கள், மூன்று சிறிய போர்க்கப்பல்கள், 2 விமானம் தாங்கி கப்பல்கள்) மற்றும் இரண்டு விமானங்கள் அடங்கிய குழு வட ஆர்டிக் கடல் மற்றும் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் அத்துமீறி ஊடுருவியது.
இதனை தனது ஸ்டேட் ஆப் ஆர்ட் (State-Of-Art) ரேடார்கள், சென்சார்கள் மற்றும் சர்வேலன்ஸ் கேமராக்கள் மூலமாக பிரிட்டிஷ் ராயல் நேவி கண்காணித்து வந்தது.
இதையடுத்து பிரிட்டிஷ் ராயல் கப்பற் படையைச் சேர்ந்த ஒன்பது போர்க்கப்பல்கள் உடனடியாக களத்தில் இறங்கியது. இதற்கு உதவியாக 2 ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்கள் உடன் பயணித்தது. ரஷ்யாவின் இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என ராயல் நேவி தெரிவித்தது.
பிரிட்டன் கடற்படை ரஷ்யாவிற்கு அனுப்பிய செய்தியில்:-
எத்தகைய கொந்தளிப்பான, குழப்பமான சூழ்நிலையிலும் எங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் அசட்டையாக இருக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து பிரிட்டன் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.
ஆனால் ரஷ்யா தரப்பில் இது வழக்கமாக நடைபெறும் கப்பற்படை ஒத்திகை தான் என்று கூறியுள்ளது.