உலகம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி கொரோனாவிலிருந்து குணமடைந்தார்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சிகிச்சைக்கு பிறகு  குணம் அடைந்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ட்ரூடோ சில வாரங்களுக்கு முன் லண்டன் சென்று திரும்பினார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 12 முதல் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். 

பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது குழந்தைகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தோற்று இல்லை என்று தெரியவந்தது. 

ALSO READ  கடும் நெருக்கடி : குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

ஆனாலும் பிரதமரும், பிரதமர் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர். பிரதமர் ட்ரூடோ தனி அறையில் இருந்து அலுவலக பணிகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில் பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபி கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளார். ஒட்டாவா பொது சுகாதார (Ottawa Public Health) துறை மற்றும் மருத்துவர்கள் சோஃபி பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார் என்று சான்றளித்துள்ளனர்.

ALSO READ  வியக்கவைக்கும் கிளி மனிதன் இவர் தான்!
courtesy.

இதையடுத்து சோஃபி ட்ரூடோ தான் குணமடைய பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நன்றி கனடா: மூன்றாவது முறையாக பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ …!

News Editor

ஊழல் எதிரொலி…..கொதித்தெழுந்த மக்கள்…பாராளுமன்றம் தீ வைப்பு….

naveen santhakumar

டிரம்பின் பதிவை நீக்கிய பேஸ்புக்….எச்சரிக்கை விடுத்த டுவிட்டர்….

naveen santhakumar