தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் பாம்பு விஷம் விற்கப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, இங்கிலீஷ் பஜார் டவுன் என்னும் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த கலியாசாக் பகுதியை சேர்ந்த ரபீக் அலி, ஆஷிக் மண்டல், மசூத் ஷேக் ஆகியோரிடம் இருந்து பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1.5 கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.