தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சீனாவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 20 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது, இதயத்தை துளைக்கும் மோசமான மைல்கல் என, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணக்கார நாடுகளுக்கு உடனடியாக தடுப்பூசி கிடைக்கிறது, ஆனால் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தார். தற்போதைய சூழலில் அறிவியல் வெற்றி பெறுவதாகவும், ஆனால் மனிதர்களுக்கு இடையேயான ஒற்றுமை தோல்வி அடைவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சில நாடுகள் தேவைக்கு அதிகமாக தடுப்பு மருந்துகளை வாங்கி குவித்து வருவதாகவும், ஐநா பொதுச்செயலாளர் குற்றம்சாட்டினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.