கொரோனா வைரஸ் இதுவரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. 8 லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படாத நாடுகளும் உள்ளன.
பசுபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அருகே அமைந்துள்ள மிகச் சிறிய தீவு பலாவ். இந்த தீவின் மொத்த மக்கள்தொகை வெறும் 18 ஆயிரம் தான்.
இந்த மக்கள் பலாவ் மொழியை பேசுகிறார்கள். ஆனால் இந்த தீவில் இதுவரை ஒரு கொரோனா கேஸ் கூட பாதிவாகவில்லை.
இவை மட்டுமல்லாமல் பசுபிக் பிராந்தியத்திலுள்ள பல சின்னஞ் சிறிய நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் உள்ளன.
இதேபோல ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான டோங்கவும் (Tonga) கொரோனாவிடம் சிக்கவில்லை.
இதைத்தவிர மைக்ரோனேசியா,மார்ஷல் தீவுகள், சாலமன் தீவுகள் போன்ற கொரோனா பிடியில் சிக்காமல் உள்ளது. இதை தவிர அண்டார்டிகா கண்டத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால் இதே பசிபிக் கடலில் அமைந்துள்ள மரியானா தீவில் சமீபத்தில் கொரோனா பாதித்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.