உலகம்

மாலத்தீவில் தனிமையில் சிக்கிய தேனிலவு தம்பதிகள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாலே:-

மாலத்தீவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இளம் தம்பதிகள் கொரோனா பரவல் காரணமாக அங்கேயே சிக்கியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சேர்ந்த ஒலிவியா (27) (Olivia) மற்றும் ரவுல் ட ஃப்ரெடஸ் (Raul De Freitas) தம்பதிகள் தங்களது தேனிலவு கொண்டாடுவதற்காக ஆறு நாள் பயணமாக இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவின் குட்டி தீவன ஐடலிக் (Idyllic) தீவிற்கு சென்றுள்ளனர். ஒலிவியா பள்ளி ஆசிரியையாக உள்ளார் ரவுல் கசாப்பு கடைக்காரர் (Butcher) ஆக உள்ளார்.

கடந்த மார்ச் 22ஆம் தேதி இவர்களுக்கு தடபுடலாக திருமணம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இருவரும் மாலத்தீவிற்கு ஹனிமூன் கொண்டாட வந்தார்கள். இந்நிலையில் கொரோனா காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் தங்கியுள்ள இடலிக் தீவிலிருந்து மாலே தீவிற்கு செல்ல எண்ணினார்கள்.

ஆனால் முடியாமல் போனது. இதையடுத்து இவர்கள் தங்கி உள்ள விடுதியில் விருந்தினர்கள் அனைவரும் காலி செய்துவிட்டு சென்றுவிட்ட நிலையில் இவர்கள் மட்டுமே இந்த ஹோட்டலில் தங்கி உள்ளார்கள். அவர்களுக்கு கட்டணச் சலுகையை மற்றும் மருத்துவ உதவிகள் அளிப்பதற்கு அந்த விடுதி நிர்வாகம் முன்வந்துள்ளது. ஒரே ஒரு தம்பதிகள் மட்டும் அந்த விடுதியில் தங்கியுள்ள காரணத்தால் அந்த நிர்வாகம் இவர்களை நன்கு கவனித்து வருகிறது. அதோடு தினசரி இவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும் செய்து வருகிறது.

ALSO READ  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் புகார்- நிராகரித்த மாலத்தீவு...

இதனிடையே இதேபோல் மாலத்தீவில் துபாயை சேர்ந்த இந்திய தம்பதிகளும் ஊரடங்கு உத்தரவு காரணமாக சிக்கி உள்ளார்கள். துபாயைச் சேர்ந்த இந்திய தம்பதிகளான ரோஹன் பாட்யா (Rohan Bhatia) மட்டும் ரியா பாட்யா (Ria Bhatia) ஆகியோர் தங்களது தேனிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவு வந்துள்ளார்கள். இவர்களும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் மாலதீவிலேயே தற்போது தங்கி உள்ளார்கள்.

ALSO READ  அரியவகை காண்டாமிருகம் கண்டுபிடிப்பு:

அனேகமாக உலகம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளார்கள் . இந்நிலையில் மேற்கண்ட இரு தம்பதிகள் மட்டும் தான் மிகவும் சொகுசாக தங்களது தனிமையை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் பற்றி 40 வருடம் முன்பே சொன்ன திகில் நாவல்!

Admin

யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் எம்மா ராடுகானு வென்று சாதனை

News Editor

ஐநா சபைக்கு சொந்தமான காரில் பெண்ணுடன் உடலுறவு கொண்ட நபர்- வைரலாகும் வீடியோ… 

naveen santhakumar