சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா புது பிரச்சினை ஒன்றையும் கிளப்பியுள்ளது.
சீனாவில் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் விவாகரத்துக்கள் அதிகரித்து உள்ளது.
கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலானோர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் தம்பதிகள் நீண்ட நேரம் ஒன்றாக செலவிட வேண்டி உள்ளது. இதனால் இளம் தம்பதிகளிடையே விவாகரத்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து டஸௌ (Dazhaou) திருமண பதிவு மேலாளர் லூ ஷிஜுன் (Lu Shijun) கூறுகையில்:-
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ( Sichuan) மட்டும் கடந்த 24ஆம் தேதி முதல் இதுவரை 300 தம்பதிகள் விவாகரத்துகள் கோரியுள்ளனர். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலானோர் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் தம்பதிகள் நீண்ட நேரம் ஒன்றாக இருக்க வேண்டி உள்ளது.
இது இவர்களிடையே தேவையற்ற சூடான விவாதங்களை உருவாக்குகிறது இதன் காரணமாக பெரும்பாலான இளம் தம்பதிகள் விவாகரத்து கோரி வருகின்றனர் என்றார்.