உலகம்

கொரோனா வைரஸால் சீனாவில் உருவாகியுள்ள புது பிரச்சனை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா புது பிரச்சினை ஒன்றையும் கிளப்பியுள்ளது.

சீனாவில் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் விவாகரத்துக்கள் அதிகரித்து உள்ளது.

கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலானோர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் தம்பதிகள் நீண்ட நேரம் ஒன்றாக செலவிட வேண்டி உள்ளது. இதனால் இளம் தம்பதிகளிடையே விவாகரத்து அதிகரித்து வருகிறது. 

ALSO READ  தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் உலக நாடுகள் !

இதுகுறித்து டஸௌ (Dazhaou) திருமண பதிவு மேலாளர் லூ ஷிஜுன் (Lu Shijun) கூறுகையில்:-

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ( Sichuan) மட்டும் கடந்த 24ஆம் தேதி முதல் இதுவரை 300 தம்பதிகள் விவாகரத்துகள் கோரியுள்ளனர். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலானோர் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் தம்பதிகள் நீண்ட நேரம் ஒன்றாக இருக்க வேண்டி உள்ளது. 

ALSO READ  அசத்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் மகள்... வைரலாகும் வீடியோ..!

இது இவர்களிடையே தேவையற்ற சூடான விவாதங்களை உருவாக்குகிறது இதன் காரணமாக பெரும்பாலான இளம் தம்பதிகள் விவாகரத்து கோரி வருகின்றனர் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்கா-தலிபான்கள் இடையே கையெழுத்தாகிறது அமைதி ஒப்பந்தம்- இந்தியா பங்கேற்ப்பு..!!!!

naveen santhakumar

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு..

Shanthi

இந்தியாவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டும் டிரம்ப்…..

naveen santhakumar