தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஜகார்த்தா:-
இந்தோனேசியாவின் மொலுக்கா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று சுலாவெசி. சுலாவெசி தீவின் கொடாமோபகு என்ற இடத்தில் இருந்து கிழக்கே 224 கி.மீ. தூரத்தில், இந்தோனேசிய நேரப்படி 15.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.
பொதுவாக ரிக்டர் அளவுகோலில் 6-க்கு மேல் என்றாலே பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலநடுக்கமாக தான் இருக்கும். எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் இழப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து உடனடி தகவல் கிடைக்கவில்லை.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.