கராச்சி:-
பாகிஸ்தானில் லூகூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் கராச்சி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.
இந்த விமானம் 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் பயணித்ததாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் காக்கர் தெரிவித்துள்ளார்.
லாகூர் நகரிலிருந்து 107 பேருடன் பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்தின் A320 என்ற விமானம் கராச்சி நகருக்குப் புறப்பட்டது
விமாம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க ஒரு நிமிடம் இருந்தபோது, மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியுருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 முதல் 8 வீடுகள் வரை சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் பயணித்தவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் மீட்புபுப் படையினர், தீயணைப்புப் படையினர், போலீஸார் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இதற்கு முன்பு நடந்த விபத்துக்கள்:-
பாகிஸ்தான் வரலாற்றில் பயணிகள் விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்கள் என இதுவரை பல விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.
சர்வதேச விமான விபத்துக்களை கண்காணிக்கும் விமான விபத்து பதிவு அலுவலக தகவல்படி, பாகிஸ்தானில் இதுவரை 80க்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் நடந்துள்ளன என்றும், அதில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.