சென்னை:-
தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஅறிவித்தார். இவர்களுக்கான மதிப்பெண்கள் காலாண்டு மட்டும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் 80% வழங்கப்படும். மேலும் இவருடைய வருகை பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மறுத்தேர்வு சூழலுக்கேற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.