இத்தாலியில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் அந்நாட்டு பிரதமர் கண்ணீர் விட்டு அழுததாக தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இந்த பதிவு உண்மை நிலவரம் என்ன?
கொரோனா பரவ ஆரம்பித்த சீனாவை விட அதிகமாக கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிப்படைந்துள்ள நாடாக இத்தாலி திகழ்கிறது. இதுவரை 63,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 6,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவினால் இத்தாலியில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் மரணமடைந்து வருவதால், நாடு இருக்கும் நிலையை எண்ணி இத்தாலி பிரதமர் கதறி அழுததாகவும், மேலும் பல தகவல்களை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் உலா வருகிறது
இதன் உண்மை நிலவரம் என்ன?
உண்மையில் இவர் இத்தாலி பிரதமரே கிடையாது. ஆம், இவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சாரோ (Jair Bolsaro).
இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ‘2018-ம் ஆண்டு நடைபெற்ற கத்திகுத்து சம்பவம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியனார்’. அந்த புகைப்படத்தை தற்போது கொரோனாவுடன் இணைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
இத்தாலியின் பிரதமர் இவர் தான் பெயர் கியூசிபே காண்டே (Giuseppe Conte)
காண்டே இதுவரை கொரோனா தொடர்பான எந்த பேட்டியிலும் அழுகவில்லை.
கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை விட வேகமாக அது குறித்த வதந்திகள் பரவிவருகிறது. எனவே எதையும் ஆய்ந்து, ஆராய்ந்து அனுகுங்கள்.