உலகம்

3 குழந்தைகள் பெற்று கொள்ள மானியம் – தம்பதிகள் குஷியோ குஷி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

China's new law to hold parents responsible for children's criminal  behavior - Global Times

சீனாவில், 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்த பல்வேறு சலுகைகளை தம்பதிகளுக்கு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. அந்நாட்டில், மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒற்றைக் குழந்தை திட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. பின்னர், பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்ததால் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

China drafts law to punish parents for children's bad behaviour, East Asia  News & Top Stories - The Straits Times

சீனாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த மே மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்திருப்பது தெரிய வந்தது. இளம் வயதினர் குறைந்து, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எதிர்காலத்தில் பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கக்கூடும் என்பதால் இரண்டு குழந்தைகளுக்கு பதிலாக மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என கடந்த மே மாதம் சீன அரசு அறிவித்தது.

ALSO READ  டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவடைந்தது - பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது - இந்தியாவுக்கு 33 வது இடம்

இந்நிலையில், சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மானியங்கள், வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தாய்மார்களை கவனித்துக் கொள்ள தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் அந்நாட்டு தம்பதிகள் மகிழச்சி அடைந்து உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட மீன்…

Admin

உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு அழைக்கப்பட்ட தினம் இன்று…..

naveen santhakumar

தங்க சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களில் சிலர் பிணமாகவும்,உயிருடனும் மீட்பு

naveen santhakumar