டோக்கியோ
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெகு விமரிசையாக நடந்து நிறைவுபெற்றது. இதில் 110 கிலோ மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ஜமைக்கா நாட்டு வீரர் ஹன்சிகா கலந்து கொண்டார்.

இவர் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒலிம்பிக் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல பேருந்து வசதி உண்டு. ஆனால் ஹன்சிகா எற வேண்டிய பேருந்தில் ஏறாமல் வேறு ஒரு பஸ்ஸில் ஏறி விட்டார். இதனால் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்திற்கு செல்லமுடியாமல் தவிர்த்துள்ளார்.
இவருக்கான ஓட்டப்பந்தயம் துவங்குவதற்கு சிறிது நேரம் மட்டுமே இருந்தது. நாம் ஓட்டப்பந்தய நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல் போய்விடுமோ? என பயம் இவருக்கு தொற்றிக்கொண்டது.
ஒலிம்பிக் போட்டியில் தன்னார்வலராக இருந்த திரிஜான இவரது பதட்டத்தை அறிந்து உதவி செய்துள்ளார் டாக்ஸி பிடித்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தபோது ஹன்சிகா டாக்ஸிக்குக் கொடுக்க வேண்டிய பணம் கூட இல்லாதது தெரியவந்தது.
உடனே தன்னார்வலர் திரிஜான டாக்சிகுரிய பணமும் கொடுத்து உதவியுள்ளார். இதன் மூலம் ஹன்ஸ்லே சரியான நேரத்திற்கு ஒலிம்பிக் மைதானத்திற்கு வந்து சேர்ந்தார். உரிய நேரத்தில் இவர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு 13.4 வினாடியில் ஓடி தங்கம் பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான நேரத்தில் தடை ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள உதவி செய்த திரிஜான தன்னார்வலரை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து நன்றி தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.