வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே சுமார் 250 மைல் தொலைவில் அமைந்துள்ளது. கடந்த 1998 ஆண்டு முதல் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யாவின் நௌகா கலன் புதியதாக அனுப்பப்பட்டது. இந்த நௌகா கலன் ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட சில மணி நேரத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தீ விபத்து எற்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக சர்வதேச விண்வெளி நிலையம் 540 டிகிரி கோணத்தில் நகர்ந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையம் 45 டிகிரி கோணத்தில் நகர்ந்தது என்று நாசா விஞஞானிகள் கூறினாலும், சர்வதேச விண்வெளி நிலையம் அதன் அசல் நிலைக்கு ஒப்பிடும்போது.சுமார் 540 டிகிரி கோணத்தில் நகர்ந்து தலைகீழாக மாறி விட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.
ஹூஸ்டனில் உள்ள நாசாவின் மிஷன் கண்ட்ரோல் சென்டரில் பொறுப்பேற்றுள்ள விமான இயக்குனர் ஜெபுலன் ஸ்கோவில், ‘இந்த சம்பவம் சரியாக தெரிவிக்கப்படவில்லை. விண்வெளி நிலையம் 540 டிகிரி கோணத்தில் நகர்ந்த பிறகு பழைய நிலைக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த விபத்து நடந்தபோது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களுக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.