தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வாஷிங்டன்:
ஜோ பிடன் நிர்வாகத்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நீரா டான்டனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலர், ஜோ பிடனின் நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார். கொரோனா தடுப்பு சிறப்பு குழுவின் துணைத் தலைவராக டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வரிசையில் வெள்ளை மாளிகையின், ஓ.எம்.டி. எனப்படும் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் இயக்குனராக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நீரா டான்டன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.