சிரியா
2021ஆம் ஆண்டின் சர்வதேச உலக மேயர் பரிசு மற்றும் விருதுக்கு சிரியா நாட்டைச் சேர்ந்த பெண் மேயரான லைலா முஸ்தஃபா: தேர்வு செய்யப்பட்டுள்ளார். லைலா முஸ்தஃபா தமது சொந்த நகரமான ரக்காவை மீண்டும் கட்டியமைத்ததற்காக இவர் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்.
சிரியாவில் ரக்கா விடுதலை ஆகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் கோட்டை மற்றும் தலைநகரமாக விளங்கி வருகிறது. ரக்காவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது இல்லை.
குறிப்பாக சில கிறிஸ்தவ மற்றும் யஸீதி இன பெண்கள் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் ரக்கா நகரம் இருந்த காலகட்டத்தில் பலரை சிறைபிடிக்கப்பட்டனர். பலர் பாலியல் அடிமைகளாக வாங்கி விற்கப்பட்டனர். பெண்கள் நிகாபை (முகத்தை மறைத்தல்) அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
லைலா முஸ்தஃபா என்ற இந்தப் பெண், தனது சொந்த நகரான ரக்காவை மீண்டும் கட்டியெழுப்பவும், அங்குள்ள பெண்களுக்கு உதவவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். எனவேதான் லைலா முஸ்தஃபா உலகின் சிறந்த மேயர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.