நகோலெஸ்:-
கொரோனா பரவல் காரணமாக மெக்சிகோ முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மெக்சிகோவில் உள்ள நகோலெஸ் நகரில் வீட்டில் தனித்திருந்த 13 வயது சிறுமியை வீடு புகுந்த மர்ம நபர் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான்.
மெக்சிகோவின் நகோலெஸ் நகரைச் சேர்ந்தவர் ஆனா பவுலா (Ana Paola). சம்பவத்தன்று இந்த சிறுமி தனது குடியிருப்பின் தனித்து இருந்துள்ளார். இவரது தாயார் கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீடு புகுந்த மர்ம நபர் ஒருவன் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளான்.
வீட்டுக்கு திரும்பி வந்த தயாரிப்பில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது அவரது மகன் படுக்கையறையில் சடலமாக கிடந்துள்ளார்.
முன்னதாக அவரை தொலைபேசியில் அழைத்த அவரது முன்னாள் கணவர் மகள் ஆனாவை தொடர்பு கொண்டபோது எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக வீட்டுக்கு விரைந்துள்ளார். அங்கு போலீசார் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் மெக்சிகோவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்பொழுது சமூக வலைத்தளங்களில் #JusticiaParaAnaPaola (#JusticeForAnaPaola) என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.