ஸ்டாக்ஹோம்:
இந்த ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயி க்ளூக் கிற்கு வழங்கப்படுகிறது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த மாதம் அக்டோபர்-5ம் தேதி மருத்துவத்துறைக்கும், நேற்று முன்தினம், இயற்பியல் துறைக்கும், நேற்று வேதியியல் துறைக்குமென்று நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கென இலக்கியத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் குளூக் கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1943ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த அவர், கேம்ப்ரிட்ஜ் நகரில் வசித்து வருகிறார். கவிஞரான இவர், யேல் பல்கலையில் ஆங்கில துறை பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.