இந்திய பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது இருவரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, போதைப்பொருள், பயங்கரவாதம், பெண்கள் உரிமை, சிறுபான்மையினர் பிரச்சினை ஆகியவை குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டின் ஆலோசனைகள் அப்படியே நீட்டிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.
அதே நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம், “கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் மீண்டும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருப்பதை ஜனாதிபதி வரவேற்றார். வரவிருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான G20 மற்றும் COP26 நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்காக அவர்கள் வழக்கமான கலந்துரையாடல்களை நடத்துவார்கள், மேலும் இருநாடுகளும் தொற்றுநோய்க்கு எதிரான கூட்டு நடவடிக்கையைத் தொடரும் ” என தெரிவித்துள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்