பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பெஷாவரில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சங்லா மாவட்டத்தை சேர்ந்த சீக்கிய இளைஞர் ரவுந்தர் சிங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு, அவரின் மொபைல் மூலமாகவே குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சீக்கியர்கள் மீது குறி வைத்து தாக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.சிறுபான்மையினரை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு பாகிஸ்தான் உபதேசம் செய்வதை விடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.