நகரத்துக்கு இடம்பெயர்வு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிட மாககொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி , நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது .
அதில் கூறப் பட்டு இருப்பது, தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம் .
Iநகர்ப்புறங்களில் பொருளாதார வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் , கிராமப்புறங்களில் இருந்து ஏராளமானோர் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள் .
அதனால் மக்கள் தொகையில் பாதிப்பேர் நகரங்களில் வசித்து வருகிறார்கள் . வேகமான நகரமயமாக்கல் காரணமாகவும் , நகர மக்கள் தொகை அதிகமாவதாலும் நகர்ப்புறங்களில் வீட்டு வசதி போன்ற கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது .
ரூ .1,095 கோடி கடன் தேசிய அளவிலான வீடுகள் பற்றாக்குறையில் தமிழ்நாட் டில் வீடுகள் பற்றாக்குறை 6.66 சதவீதமாக உள்ளது .
குறைந்த வருவாய் கொண்ட குடும்பங் கள்தான் வீடு இல்லாமல் உள்ளன .
இதை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவ தற்காக ரூ .1,095 கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது .
பாதுகாப்பான வீடுகள் இந்த கடனை பயன்படுத்தி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக 9 இடங்களில் வீடுகள் கட்டப்படும் .