பிரித்தானியாவில் தேடப்பட்ட குற்றவாளி ஒருவன் அந்நாட்டில் பிச்சையெடுத்து வந்த நிலையில் காவல்துறையினரிடம் வசமாக சிக்கியுள்ளான்.
மிட்செல் பாரென் என்ற அந்த நபர் ஜூனோ ஜோன்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். திடீரென அவர்களுக்குள் வந்த நிலையில் ஜூனோ மீது மிட்செல் கடும் கோபத்தில் பழிவாங்க நேரம் பார்த்து காத்திருந்தார்.
இந்நிலையில் 2018ம் ஆண்டு ஜூனோ ஜோன்ஸ் வீட்டுக்கு சென்ற மிட்செல் அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மிட்செல்லை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர்.
இந்த நேரத்தில் லிவர்பூரில் உள்ள சிட்டி சென்டர் ஒன்றில் பிச்சையெடுத்த நபரை பார்த்த காவல் அதிகாரி ஒருவருக்கு சந்தேகம் வர, அவரை கண்காணித்த போது அவர் மிட்டெல் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மிட்செலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.