1960 களில் அண்டார்டிகாவில் வானிலை ஆய்வாளராக பணியாற்றிய சான் டியாகோவை சேர்ந்த 91 வயதான நபருக்கு உலகின் தென் எல்லையில் காணாமல், போன வாலெட், 53 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கிடைத்துள்ளது.
அமெரிக்க கடற்படை வானிலை ஆய்வாளர் பால் கிரிஷாம் 1967-ம் ஆண்டில் அண்டார்டிகா கண்டத்தில் வானிலை நிலவரங்களை கண்காணிக்க அங்கு அவர் ரோஸ் தீவில் ஒரு அறிவியல் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு வானிலை முன்னறிவிப்பாளராக ஒரு வருடம் பணியாற்றினார். கிட்டதட்ட, 13 மாதங்களுக்குப் பிறகு, அவர் கலிபோர்னியாவுக்குத் திரும்பியபோது, அவர் தனது பணப்பையை தவறவிட்டார்.
மெக்முர்டோ நிலையத்தில் ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டபோது இரண்டு வாலெட்கள் ஒரு லாக்கரில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வாலட்டில் அவரது கடற்படை அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அணு, உயிரியல் மற்றும் ரசாயன தாக்குதலின் போது என்ன செய்வது என்பது குறித்த குறிப்பு அட்டை, ஒரு பீர் ரேஷன் பஞ்ச் கார்டு, வரி அறிக்கை மற்றும் அவரது மனைவிக்கு Money Order அனுப்பிய ரசீதுகள் ஆகியவை இருந்தன.
லாப நோக்கற்ற அறக்கட்டளையைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரரான மெக்கீ, இதன் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக அமெரிக்க கடற்படை வானிலை சேவை சங்கத்தை அணுகினார். நல்லவேளையாக க்ரிஷாம், இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளார், இது மீண்டும் இணைவதற்கு உதவியது.
மேலும், முன்பு அண்டார்டிகாவில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்டீபன் டெகாடோவும் வாலெட் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட உதவியாக இருந்தார்.அண்டார்டிகாவில் வாலெட்டை இழந்தது சரியாக நினைவில்லை, ஆனால் அதனை இத்தனை முயற்சிகள் செய்து திருப்பி அளித்தவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றார் கிரிஷாம்.
இந்த வாலெட் அவர்களுடைய பழைய கால நினைவுகளை சுமந்துள்ள ஒரு பொக்கிஷமாகும். தவிர ஒரு முன்னாள் கடற்படை வீரருக்கு தூங்குவதற்கு கடமைப்பட்டுள்ளேன் என்றார் மெக்கீ.உண்மைதான் அந்த வாலெட் கிரிஷாமை மீண்டும் 53 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று அவரது அந்த 13 மாத ஆராய்ச்சியின் நினைவுகளில் ஆழ்த்தும்.