தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 24,324க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் பிறப்பிடமான ஹூபேய் மாகாணத்தில் 11,177 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் 15 பேருக்கும், மக்காவ்வில் 8 பேருக்கும், தைவானில் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. 21,558 பேர் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.