பெய்ரூட்:-
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வெறும் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடைக்கொண்ட அமோனியம் நைட்ரேட் (Ammonium Nitrate) வெடித்ததால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது. இந்த வெடிப்பால் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான இந்த நில அதிர்வு சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டது
இந்நிலையில் துறைமுக கிடங்கில் இவ்வளவு டன் அமோனியம் நைட்ரேட் என்ன காரணத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதலில் அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன??
அமோனியம் நைட்ரேட் என்பது மனமற்ற படிக நிலையில் உள்ள இது பெரும்பாலும் விவசாயத்திற்கு உரமாக பயன்படுகிறது. இதோடு ஏதோனும் எரிபொருள் இணையும் பட்சத்தில் வெடித்துவிடும். மேலும் பல தசாப்தங்களாக அமோனியம் நைட்ரேட் படிப்படியாக பயன்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரி இவ்வளவு அம்மோனியம் நைட்ரேட் துறைமுகக் கிடங்கில் ஏன் பதிக்க வைக்கப்பட்டது கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து சட்டவிரோதமாக கப்பல் கொண்டுவரப்பட்ட அமோனியம் நைட்ரேட் லெபனான் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டது பொதுவாக இதுபோன்ற எரிபொருளை நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் வைக்க மாட்டார்கள் ஆனால் முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் நீண்ட நாட்களாக அமோனியம் நைட்ரேட் இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது இதனால் தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதல்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து லெபானான் பிரதமர் ஹசன் தியாப் (Hasan Diab) கூறியது:-
விவசாயத்திற்கு உரமாகப் பயன் படுத்துவதற்காக தான் இந்த அமோனியம் நைட்ரேட் 67 ஆண்டுகளாக துறைமுக கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்று லெபனான் பிரதமர் கூறினார்.
இவர் கூறிய கூற்று முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.
இதனிடையே மாபெரும் வெடிப்புக்குள்ளான இந்த துறைமுகக் கிடங்கை ஹிஸ்புல்லா (Hezbollah) தீவிரவாதிகள் தங்களது ஆயுதங்களை பதுக்கி வைக்க பயன்படுத்தினார்கள் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
அதேசமயம் லெபனான் நாட்டிற்கு உதவுவதற்கும் இஸ்ரேல் முன்வந்துள்ளது இஸ்ரேலின் உதவியை லெபனான் நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இஸ்ரேலிய மருத்துவமனைகள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
லெபனான் பாதுகாப்புத்துறை தலைவர் அப்பாஸ் இப்ராஹிம் இந்த குண்டுவெடிப்பு குறித்து கூறுகையில்:-
அமோனியம் நைட்ரேட் நீண்டகாலமாக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுற்றுப்புறச் சூழல் தாக்கம் காரணமாக கூட இந்த வெடிப்பு ஏற்பட்டு இருக்கலாம். எனினும் முழுமையான காரணம் இதுவரையில் தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது விரைவில் அமோனியம் நைட்ரேட் எவ்வாறு வெடித்தது என்பது குறித்து தெரியவரும் என்றார்.