ஒட்டாவா :-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வின் மனைவி சோஃபி கிரிகோர் ட்ரூடோ-விற்கு (Sophie Grégoire) கொரோனா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடா பிரதமரின் செய்தித்தொடர்பாளர் கேமரான் அஹ்மத் கூறுகையில்:-
பிரதமரின் மனைவி சோஃபி கிரிகோர் ட்ரூடோவிற்கு கொரோனா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
எனினும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-விற்கும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
மருத்துவர்களின் அறிவுரைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். ட்ரூடோ பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல மாட்டார் என்றும் வீட்டிலிருந்தபடியே பணியாற்றுவார் என்றும் தெரிவித்துள்ளார்.