கோகக், கர்நாடகா:-
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரே நாளில் 6000 கோழிகளை கோழி வியாபாரி ஒருவர் மண்ணில் புதைத்து உள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே கோகக் தாலுகாவின் நூல்சூர் பகுதியைச் சேர்ந்தவர் நஜீர் அஹமத் மகந்தார். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது பண்ணையில் இருந்த 6,000 கோழிகளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மண்ணில் பெரிய குழி வெட்டி அனைத்து கோழிகளையும் அதனுள் போட்டு புதைத்துள்ளார்.
இதுகுறித்து நஜீர் அஹமத் கூறுகையில்:-
இந்த கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கோழிகறி மற்றும் முட்டை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் யாரும் கோழிக்கறி வாங்குவதில்லை. இதனால் வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது.
சமீபத்தில் 6 லட்சம் செலவு செய்து தான் கோழிகளை வாங்கினேன். தவிர பறவை காய்ச்சல் அச்சம் வேறு எனவே தான் இனி சமாளிக்க முடியாது என்று எண்ணி இந்த கோழிகளை மண்ணில் புதைக்க முடிவு செய்தேன் என்று கூறினார்.