சினிமா

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மூன்று கோடி ரூபாய் நிதியுதவி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மூன்று கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்த 3 கோடியில் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 லட்சமும், தினக் கூலிகள் மற்றும் தான்பிறந்த பகுதியான ராயபுரம் பகுதி ஏழை மக்களுக்கு 75 லட்சமும் அளித்துள்ளார்.

ALSO READ  திரையரங்கை விட்டு ஓடிடிக்கு சென்ற திரைப்படம்; 'கர்ணன்' பட நடிகை அறிவிப்பு !

முன்னதாக நடிகர் அஜீத் 1.25 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகர்கள் நிதியுதவியை வாரி வழங்கியுள்ள நிலையில் பெரிய தமிழ் நடிகர்கள் யாரும் இதுவரை பெரிய அளவிலான தொகையை வழங்கவில்லை. இந்நிலையில் சாதாரண நடிகரான ராகவா லாரன்ஸ் மூன்று கோடி ரூபாய் கொடுத்துள்ளது பாராட்டுதலுக்குரியது.

ALSO READ  பரவும் கொரோனா; ஊரடங்கை நீட்டித்தது ஆந்திர அரசு !

இதுவரை தமிழில் ஜாம்பவான் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் இதுவரை கொரோனா நிவாரண நிதி என்று எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் மட்டும் ஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரேயொரு ட்வீட் தான்…மகிழ்ச்சியான சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

Admin

பிரபுதேவாவின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்..!

News Editor

விக்கி இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி,நயன்தாரா கூட்டணியா.. ?

Admin