இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்ட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த ஊரடங்கில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரைஅத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்படும் என அரசு கூறியுள்ளது. இதில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.