ஜெய்ப்பூரில் உள்ள சௌக் கான்டா, சந்த்போல் கேட், படி சௌபாத், சோட்டி சௌபாத், திரிபோலியா கேட், ஜோரி பஜாா், சங்கனேரி கேட் ஆகிய இடங்களில் கடந்த 2008-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி அடுத்தடுத்து தொடா் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த பகுதிகள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் பகுதிகளாக இருந்ததால், இந்த சம்பவங்களில் 70-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 185-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இதையடுத்து கடந்த 2008-ஆம் ஆண்டு முகமது சய்ஃப், முகமது சா்வாா் ஆஷ்மி, முகமது சல்மான், சய்ஃப்பூா் ரஹ்மான், ஷாபாஸ் ஹுசைன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பேரில் 3 போ் தலைமறைவாக உள்ளனா். 2 போ் 2008-ஆம் ஆண்டு தில்லியில் பட்லா ஹவுசில் போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இவ்வழக்கை ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் 11 ஆண்டுகளாக விசாரித்து வந்தது.இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 4 பேரும் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஷாபாஸ் ஹுசைனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததாலும், அவா் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் நிரூபிக்கப்படாததாலும், அவரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.