தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் வீட்டின் மொட்டைமாடி மற்றும் அறையில் செய்யும் உடற்பயிற்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அருண் விஜய் வெளியிட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்யும்போது, தனக்கு ஏற்பட்ட காயம் தொடர்பான பதிவொன்றை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். எப்பொழுதுமே உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மிஷினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
நான் கிழே விழுந்த சமயத்தில் இருந்து சரியாக ஒரு வாரத்திற்கு காலில் வீக்கம் இருந்தது. நல்லவேளை என் தலையில் அடிபடவில்லை. கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.