இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த ரெமோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தினை நடிகர் கார்த்தியை வைத்து “சுல்தான்” என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவரை தொடர்ந்து யோகி பாபு, பொன்னப்பாலம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கார்த்தியின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் சுல்தான் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் கட்டி வரும் படக்குழு.
இதனையடுத்து சமீபத்தில் சுல்தான் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் சுல்தான் படத்தின் டிரைலர் மார்ச் 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பாரார் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.