உலான்பாடர் (Ulaanbaatar):-
மனிதநேய அடிப்படையில் கொரோனா வைரஸால் உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக திகழும் அமெரிக்காவிற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதற்கு மங்கோலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் கொரோனா வைரஸூக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு உடைகள் பிற பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றிக்கொண்டு ஜூன் 21-ஆம் தேதி சாட்டர் விமானமொன்று அமெரிக்காவிற்கு செல்கிறது.
அதே விமானத்தில் சியாட்டல் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் சிக்கித் தவிக்கும் மங்கோலிய மக்களை ஏற்றுக் கொண்டு திரும்பவும் மங்கோலியாவில் செல்கிறது.
முன்னதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ரஷ்யாவிற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக மங்கோலியா உறுதி அளித்திருந்தது. மங்கோலியா ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள நாடாகும். இதேபோல 30,000 செம்மறி ஆடுகளை சீனாவிற்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.
உலகில் பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவி அளித்து வந்த அமெரிக்காவிற்கு பொருளாதாரத்தில் மிகச் சிறிய நாடான மங்கோலியா தற்போது நிதி உதவி அளித்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொரோனா பரவும் காலகட்டத்தில் கூட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.