தமிழகம்

காரில் 8 ஃபுல் பாட்டில், 2 கேஸ் பீருடன் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்களை கொண்டு வந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணனின் கார் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாண்டிச்சேரியில் இருந்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணனின் இன்னோவா காரை கிழக்கு கடற்கரை சாலை உள்ள செக்போஸ்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 பாட்டில்கள் ஃபுல் மற்றும் இரண்டு கேஸ் பீர்  சிக்கியது.

ALSO READ  தனது மகளை காண்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய 101 வயது மூதாட்டி....

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. எனவே வெளியூரில் மது வாங்கி சென்னைக்கு எடுத்துச்செல்வது கடத்தலாகக் கருதப்படும் எனப்போலீஸார் விளக்கியதும் அதை ரம்யா கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். பின்னர் கார் கானாத்தூர் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டது. டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

பின்னர் ரம்யா கிருஷ்ணன் தானே காரை ஓட்டி சென்னை திரும்பினார். சென்னையை சீல் வைக்கப்போகிறார்கள் என்கிற வதந்தியால் பிரபலங்கள் அவசரமாக வெளியூர்களில் இருந்து வண்டி வண்டியாக சரக்குகளை வாங்கி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு..!

Admin

மழைநீர் கால்வாய்களை தூர்வார 10 கோடி செலவில் 100 ரோபோ: சென்னை மாநகராட்சி திட்டம்

Admin

மதுரையில் கொடூரம்…..இளைஞர் தலையை வெட்டி தேவாலயத்தின் முன்பு வைத்த கும்பல்…..

naveen santhakumar