சென்னை:-
பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்களை கொண்டு வந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணனின் கார் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாண்டிச்சேரியில் இருந்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணனின் இன்னோவா காரை கிழக்கு கடற்கரை சாலை உள்ள செக்போஸ்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 பாட்டில்கள் ஃபுல் மற்றும் இரண்டு கேஸ் பீர் சிக்கியது.
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. எனவே வெளியூரில் மது வாங்கி சென்னைக்கு எடுத்துச்செல்வது கடத்தலாகக் கருதப்படும் எனப்போலீஸார் விளக்கியதும் அதை ரம்யா கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். பின்னர் கார் கானாத்தூர் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டது. டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் ரம்யா கிருஷ்ணன் தானே காரை ஓட்டி சென்னை திரும்பினார். சென்னையை சீல் வைக்கப்போகிறார்கள் என்கிற வதந்தியால் பிரபலங்கள் அவசரமாக வெளியூர்களில் இருந்து வண்டி வண்டியாக சரக்குகளை வாங்கி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.