புதுடெல்லியில் இருந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ரா நோக்கி செல்லும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா கூறுகையில், “இந்தியாவில் தயாரான இந்த ரெயிலை இங்கிருந்து தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். வேகம், அளவு மற்றும் சேவை ஆகிய கொள்கைகளை முன்வைத்து தனது இலக்குகளை அடைவதற்காக ரயில்வே பணியாற்றி வருகிறது.
சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிக்கான பயணம் தொடங்கியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் பிரிவு 370 ஆனது நீக்கம் செய்யப்படுவதற்கு முன், வளர்ச்சிக்கான வழிகள் தடைப்பட்டு இருந்தன.
அடுத்த 10 ஆண்டுகளில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு மற்றும் காஷ்மீர் உருமாறும்” என்று தெரிவித்தார்.