தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சிஆர்பிஎப், பிஎஸ்எப் உள்ளிட்ட 7,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். தற்போது அங்கு நிலையை சுமூகமாக உள்ளதால், கூடுதலாக குவிக்கப்பட்ட தலா 100 பேர் கொண்ட 72 கம்பெனி படையினரை வாபஸ் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.