னலக்னோ:-
உத்தரபிரதேச மாநில கேபினட் அமைச்சர் கமலா ராணி வருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக (Technical Education Minister) பணியாற்றியவர் கமலா ராணி வருண் (62).
கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஜூலை 18 ஆம் தேதி சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் (Sanjay Gandhi Postgraduate Medical Science Institute) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கமலா ராணி உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,700 ஆக உள்ளது. தலைநகர் லக்னோ, கான்பூர், மீரட் உள்ளிட்ட நகரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.