தமிழகம்

நாகை எம்.பி. செல்வராஜுக்கு கொரோனா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாகை:-

நாகப்பட்டிணம் இந்திய கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தஞ்சை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

நாகை எம்.பி. செல்வராஜுக்கு காலில் லேசாக அடிபட்டதால் புண் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, காய்ச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக, நேற்று (சனிக்கிழமை) காலை வந்த அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியான பரிசோதனை முடிவில், எம்.பி. செல்வராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

ALSO READ  சசிகலா தமிழக வருகை; இரண்டு கார்கள் எரிந்து நாசம் !

இதைத்தொடர்ந்து, அவர் தஞ்சை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அனுமதிக்கப்பட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்த ஸ்டாலின் !

News Editor

குடிமகன்களால் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி…

naveen santhakumar

கழிவறையில் கேமரா.. போலீசிடம் சிக்கிய சென்னை ஐஐடி பேராசிரியர்…

naveen santhakumar