தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். அப்போது அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தனது பயணத்தை தொடங்கி தமிழக எல்லையை வந்தடைந்தார் சசிகலா.
அவரது வருகையையொட்டி தமிழக எல்லையில் சசிகலா ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதேபோல் பாதுகாப்பு பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சசிகலா வருகையையொட்டி கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே அவரை வரவேற்க வெடிக்கப்பட்ட வெடியால் இரண்டு வாகனங்கள் தீக்கிரையானது.
இதில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதனையடுத்து தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருக்கும் வாகனங்களை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.