மும்பை:
மும்பையில் உள்ள ஜேஜே எனும் காலத்தில் பாலத்தை ஒட்டியுள்ள சாலையின் அருகே உள்ள வீட்டில் ஒரு தம்பதி வசித்து வந்தனர்.
தம்பதியினர் அப்துல் ரகுமான் மற்றும் நசரத் அலியாஸ் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சாப்பாட்டில் உப்பு கம்மியாக இருந்ததாக கூறி அப்துல் ரகுமான் தனது மனைவி நசரத் அலியாஸ் இடம் தகராறு செய்துள்ளார். அதனை தொடர்ந்த கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் பெரிய கலவரமாக மாறியது. இதனால் அப்துல் ரகுமான் தனது மனைவி சாலையில் வைத்து சராமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அடித்த போது சாலையின் அருகே உள்ள கல்லில் நசரத் அலியாஸின் தலை அடிபட்டது. தலையில் ஏற்பட்ட காயத்தால் நசரத் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
சாப்பாட்டில் உப்பு கம்மியாக இருந்ததால் ஏற்பட்ட தகராறில் ஒரு கொலையே நிகழ்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார்.