தமிழகம்

காக்கி-கரண்ட் இடையே மோதல்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் மின் வாரிய ஊழியர்களின் பைக்கை பறிமுதல் செய்த காவல் நிலையத்திற்கு மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவில்லிப்புத்தூர் கூமாப்பட்டி காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அந்த வழியாக வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவரது பைக்கை சோதனை செய்துள்ளார். உரிய ஆவணங்கள் இல்லாமல் பயணித்ததற்காகவும், ஒரே பைக்கில் மூவர் வந்ததற்காகவும் அவரது பைக்கை சப்-இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்தார் .

இதுகுறித்து மின்வாரிய ஊழியர் சைமன், உதவி பொறியாளர் கோபால் சாமியிடம் புகார் அளித்துள்ளார். காவலர்களின் இந்த செயலுக்கு பழி வாங்க எண்ணிய மின்வாரிய ஊழியர்கள் கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மின்சார இணைப்பை 2 மணி நேரம் துண்டித்து வைத்துள்ளனர்.

ALSO READ  வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு- 14 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு.

இதுகுறித்து கூமாப்பட்டி உதவி காவல் ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலீஸார், மின்வாரியத்தினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் முறை:

naveen santhakumar

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ .ஏ .எஸ் அதிகாரி எழுதிய நூல் சோனியா காந்திக்கு பரிசளிப்பு

News Editor

இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – அசத்தல் அறிவிப்பு !!

News Editor