புது தில்லி:
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக புதுடெல்லியில் தங்கி பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அரசு அதிகாரிகளையும் சந்தித்தார் .
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார் .
சோனியா காந்தியுடனான சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின் ஒரு புத்தகத்தையும் பரிசளித்தார். அந்த நூலின் பெயர் ‘ஜர்னி ஆஃப் ய சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை’ என்பதாகும்.
இந்தப் புத்தகத்தை எழுதியவர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆர். பாலகிருஷ்ணன். இந்திய ஆட்சிப் பணியில் பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை என பல்வேறு உயர் பதவிகளை வகித்து, ஓய்வுபெற்ற பிறகு ஒடிசா மாநில அரசின் ஆலோசகராக பணியாற்றி வரும் இவர், சிந்து சமவெளி பண்பாட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இவர் எழுதியிருக்கும் ‘ஜர்னி ஆஃப் ய சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை’ புத்தகம் சிந்து முதல் வைகை நதி வரையிலான ஒரு நாகரீகத்தின் பயணத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. இந்நூல் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகும்.