இந்தியா

கணவன் கேட்ட கேள்வி…..மனமுடைந்த புதுப்பெண்…..மணமான 8 நாளில் சோகம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேலூர் மாவட்டம்  கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் இளம்பெண் சந்திரலேகா. இவருக்கும் காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

திருமண சடங்குகள் எல்லாம் முடிந்த பின்பு அன்று இரவு முதலிரவு ஏற்பாடு நடந்துள்ளது. ஆசையாக சென்ற இளம்பெண்ணிற்கு இப்படியொரு கொடூரம் நடக்கும் என அவர் நினைத்திருக்கமாட்டார்.

முதலிரவின் போதே கணவர் பாலாஜி, தன் மனைவியிடம் விரும்பத்தகாத கேள்விகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“நீ இவ்வளவு அழகா இருக்க..கல்யாணத்திற்கு முன்பு நீ யாரையும் காதலிக்க வில்லையா???? இப்போதுவரை கற்புடன்தான் இருக்கிறாயா???? யாருடனும் உறவு வைத்துக் கொண்டதில்லையா???” எனக்கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சந்திரலேகா மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

இந்த சூழலில் திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு மணப்பெண் சந்திரலேகாவின் ஆண் நண்பர் ஒருவர், பாலாஜியின் வீட்டிற்கு சென்று திருமண வாழ்த்து கூறியுள்ளார். அப்போது சந்திரலேகாவின் குணநலன்கள் பற்றி   பாராட்டி புகழ்ந்துள்ளார்.

ALSO READ  சத்தியத்தை மீறிய கணவன்.. மகளுடன் தற்கொலை செய்த மனைவி…

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத பாலாஜி, ஆண் நண்பர் சென்ற பின் சந்திரலேகாவுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு வந்த ஆண் நண்பரையும் சந்திரலேகாவையும் சேர்த்து தவறாக பேசி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சந்திரலேகா கடந்த தன் தாய் வீட்டிற்கு வந்து, தன் மனதில் உள்ள கஷ்டங்களையெல்லாம் கடிதமாக எழுதி வைத்து மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ALSO READ  நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு நிச்சயம்…

மேலும் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்யும் போது நல்ல மாப்பிள்ளையாக பார்த்து வைக்குமாறும் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

திருமணமான 8 நாட்களில் சந்திரலேகா எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களையும், சந்திரலேகாவின் குடும்பத்தாரையும்,அப்பகுதி மக்களையும்  கடும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

No Honking சவால் – அசத்தும் பெங்களூரு…!

News Editor

2021ம் ஆண்டு முதல் தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு

Admin

500 ரூபாய்க்கு மனைவியை விற்ற கணவர்! அதிர்ச்சி சம்பவம்

naveen santhakumar