செய்த சத்தியத்தை மீறி கணவன் மதுகுடித்ததால் மனைவி,மகளுடன் தற்கொலை செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் 3ம் கட்டமாக அறிமுகமாகியது. இதில் 40 நாட்களுக்கு பிறகு மதுகடைகள், பீடா கடைகள் திறக்கலாம் என அறிவிப்புகளும் இடம் பெற்றன,
இதனால் இந்தியாவின் பல பகுதிகளிலும் மதுபானக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.இதில் மது வாங்க ஆண்களும், பெண்களும் அலைமோதினர்.
இந்நிலையில், ஆந்திராவின் சித்தூரை சேர்ந்த சொக்கலிங்கம் (55) என்பவர் ஊரடங்கின் போது தனது மனைவி ஜகதா (50) ,மகள் நந்தினியிடமும் (21) ‘இனி மது குடிக்க மாட்டேன்’ என சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.
ஆனால் மதுக்கடைகள் திறந்ததும் முதல் ஆளாக சென்று மது அருந்தியுள்ளார், இதுகுறித்து மனைவி மற்றும் மகள் கேட்டதற்கு அவர்களை தாக்கியுள்ளார் இதனால் மனமுடைந்த அவரது மனைவி , தனது மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.